Monday, August 26, 2013



அருள்கள் நிறைந்த
மாதத்தின் நிறைவில்
தூரத்து அடிவானில்
ஒற்றைக் கீறலாய் - ஒளியொன்று
ஷவ்வாலின் தலைப் பிறை.


முப்பது நாட்களின் நிறைவில்
மனசுக்குள் படர்கிறது
சொல்ல முடியா சந்தோசமொன்று.
பிரசவத்தின் முடிவில்
பிள்ளை முகம் பார்த்து
பரவசப்படும் தாய்ப் போல.


நெஞ்சுக்குள் இருக்கும்
வஞ்சமெல்லாம் மறந்து
கட்டித் தழுவிச் சொல்லும்
ஈத் முபாரக் - வாழ்த்து.


பெருநாள் காசில்
குச்சி ஐஸ் குடித்து
குதூகலிக்கும்  குழந்தை முகம்.


தக்பீரின் ஓசையோடும்
மகிழ்ந்த மனசுகளோடும்
நிறையும் மஸ்ஜித்.


உறவுகளின் வீடு தேடி...
நண்பர்களின் நட்பு நாடி...
நடக்கின்ற பாதங்கள்.


தெருவுக்குள் இருக்கும்
அடுத்த இனத்தர் இல்லம் தேடி
பலகார பார்சலோடு செல்கையில்
அவர்கள் முகத்திலும்
எம் பெருநாளின் சந்தோசம்.


பெருநாளின் சந்தோசம்
அனைவருக்குமாகுக!!!
அகிலமே மகிழ்ந்திடுக!!!
அல்லாஹூ அக்பர்!!!



மூலம் : பனி விழும் பொழுது

0 comments:

Post a Comment