Tuesday, August 27, 2013



இந்த உலகம் ஒரு ரயிலைப் போன்றது. அதனை இன்று மேற்கின் சடவாதக் கொள்கையினர் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்...

அவர்கள் அதனை செலுத்திக் கொண்டிருப்பதோ அதள பாதாளத்தை நோக்கி...

அதில் பயணம் செய்யும் பலருக்கு தாம் பாதாளத்தில் விழப் போகிறோம் என்பது தெரியாது. அவர்கள் உல்லாசமாய் கும்மாளமிட்டுக் கொண்டு தம் பயணத்தைத் தொடர்கின்றனர்.

இன்னும் சிலருக்கோ அது பாதாளத்தை நோக்கித்தான் செல்கின்றது என்று தெரியும்...

ஆனால் தம்மால் எதை செய்ய முடியும் என்று நினைத்து ரயில் செல்லும் திசைக்கு எதிர்ப்புறமாக தம் முகங்களைத் திருப்பி வைத்து அமர்ந்து கொண்டுள்ளனர்...

இதன் மூலம் தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு அவர்களுக்கு - அவர்கள் செயலோ வேடிக்கையானது...

நீங்கள் அறிவுடையோராய் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த ரயிலை நிறுத்தி அதன் சுக்கானை உங்கள் கரங்களில் எடுப்பதுதான்...

இதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்களையும் இந்த உலகத்தையும் அநீதி, அட்டூழியம், அராஜகம் என்ற அதள பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க முடியும்


~ Maulana Abul A'la Maududi ~

https://www.facebook.com/islamicarticle

0 comments:

Post a Comment