Sunday, August 25, 2013



அந்த விடியலுக்காகவே காத்திருக்கிறேன்
இல்லை - விழித்திருக்கிறேன்.

அந்த காலைப் பொழுது சந்தோசமானது
எனக்குமட்டுமல்ல - எல்லோருக்குமானது.

அநீதியும், அக்கிரமமும் தம் மைந்தரின்
மரணத்திற்காய் ஒப்பாரி வைத்து 
ஓயும் வேளையில் அந்த 
நற்செய்தியோடு உதய சூரியன்
எழுந்து வருவான்.

பூக்களின் அழகையும்
நதியின் சலசலப்பையும்
அன்றுதான் நீங்கள் ரசிப்பீர்கள்.

பறவைகளுக்கும் சலாம் சொல்லி
மகிழ்வீர்கள் - அந்தக் காலைப் பொழுது
ஒரு தூய தேசத்தில் உதயமாகும்.


மூலம் : பனி விழும் பொழுது

0 comments:

Post a Comment