Sunday, August 25, 2013

அதிகாலைப் பொழுதொன்றில்
உடம்பில் பூசிய அத்தர் மணக்க 
பிறைக் கொடியேந்தி
நான் நுழைந்தேன் 
உன் தேசத்திலன்று. 



நாய்கள் ஊளையிட்ட கருத்த இரவொன்றில்
குடித்த மதுவின் வாசனையோடே
சிலுவைக் குறி சுமந்து
நீ நுழைந்தாய் என் தேசத்திலின்று.





கொள்கையைச் சுமந்து நான் வந்தேன் அன்று.
கொலை வெறியை மட்டுமே
சுமந்து வந்திருக்கிறாய் நீ இன்று.



எனது போரின் முடிவில் உனக்கொரு
வசந்தம் காத்திருந்தது.
உனது போரோ எமது எல்லா
பசுமைகளையும் பொசுக்கிவிட்டது.



எனது வாள் உனக்காக மட்டுமே
சுற்றிச் சுழன்றது.
உனது துப்பாக்கியோ என் குழந்தைகளையே
முதலில் குறிவைத்துக் கொன்றது.



இடுப்பில் வாளும்
தோளில் நூலும் சுமந்தல்லவா
நாம் வந்தோமன்று.
ஆளோடு சேர்த்து அறிவையும்
எரித்த ஆனந்தமல்லவா உனக்கு இன்று.



எப்படியோ
நானும், நீயும் வரலாறு படைத்தவர்களானோம்.
மனிதத்தைப் புதைத்து 
நாகரீகம் படைத்தாய் நீ.
மனிதர்கள் வாழ 
நாகரீகம் படைத்தோம் நாம்.



மூலம் : பனி விழும் பொழுது

0 comments:

Post a Comment